போலிகள் போகட்டும்
.....................................................................
யாரோவாகிப்போகிறார்கள்
மனித ஒட்டுண்ணி
மனிதன்
அடையாளம் கண்டவுடன்யாரோவாகிப்போகிறார்கள்
சோளம்விதைத்துவிட்டு
நெல்அறுவடைக்கு
காத்திருக்கும்
பேராசையைச் சுட்டியதும்
யாரோவாகிப்போகிறார்கள்
கதாநாயகர்களாக
காட்டிக்கொண்டவர்கள்
வில்லனாக
அறியப்பட்டதும்
யாரோவாகிப்போகிறார்கள்
போலத்தெரிவதன்றி
வேறேதுமில்லாதவர்கள்
ஏமாற்றுவதற்கான வெளி
பரந்துகிடப்பதால்.....
யாரோவாகிப்போகிறார்கள்
யாரோவாகிப்போகட்டும்
வருத்தமில்லை !
உதிரத்தை உறிஞ்சும்
அட்டைகளாயில்லாமல்....
மனிதர்களாய் மாறிடும்
உறுதியோடு போகட்டும் !
No comments:
Post a Comment