அப்பா
இழப்பின் வலியில்
இருப்பின் வலிமை
புரிகிறது
இன்று
அப்பா இல்லை
முன்னெப்போதுமில்லாத
வெறுமையின் அடர்த்தி
சூழ்ந்த்ததானஉணர்வு
அப்பாவின்
ஆன்மீகம் தவிர்த்து
அனைத்துநற்ப்பண்புகளோடான
பொதுனலச்சிந்தனை
எனக்குள்
பதியம்போட்டுக்கொண்டது
தானாக
பொதுநலன் சார்ந்த
அவரின் சுவடில்
பயணிப்பதற்கான
சக்தியை
உறவும் நடப்பும்
கொடுக்குமென்ற நம்பிக்கையில்
தொடர்கிறது
ஈன்றோரற்ற இன்னொரு
புதுப்பயணம்
.
No comments:
Post a Comment