Sunday, December 14, 2014

அப்பா


   அப்பா   

இழப்பின் வலியில்
இருப்பின் வலிமை
புரிகிறது
இன்று
அப்பா இல்லை

முன்னெப்போதுமில்லாத
வெறுமையின் அடர்த்தி
சூழ்ந்த்ததானஉணர்வு

அப்பாவின்
ஆன்மீகம்  தவிர்த்து
அனைத்துநற்ப்பண்புகளோடான
பொதுனலச்சிந்தனை
எனக்குள்
பதியம்போட்டுக்கொண்டது
தானாக

பொதுநலன் சார்ந்த
அவரின் சுவடில்
பயணிப்பதற்கான
சக்தியை
உறவும் நடப்பும்
கொடுக்குமென்ற நம்பிக்கையில்
தொடர்கிறது
ஈன்றோரற்ற  இன்னொரு
புதுப்பயணம்



 


.






No comments:

Post a Comment