அம்மா
உசுருக்குள்ள உசுரவச்சு
உதிரப்பாலை ஊட்டி ஊட்டி
உசுர வளர்த்தவளே !
உலகைக்கொடுத்தவளே !
ஒரு நொடியும் நெடு நொடியாய்
ஒன்பது சொச்சம் மாதங்களாய்
தன்னை உருக்கி
என்னை வடித்தவளே !
ஒன்னோட கதகதப்பில்
உள்ளிருந்த பொழுதுகளில்
எனக்கு உருகொடுக்க
எத்தனையோ பத்தியங்கள்
அத்தனையும் ஏற்றவளே !
அரு மருந்தாய் காத்தவளே !
வந்து பிறந்திடம்மா : என்
வம்சத்தின் சிசுவாக !
No comments:
Post a Comment